புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு அறிவுறுத்தல்!

Date:

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்  நடைபெறவுள்ளதனால் அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களில் நடைபெறவுள்ள புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய இந்த பொதுக்கூட்டங்களை (சாதாரண தெரிவு/ இரகசிய வாக்கெடுப்பு) உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் EDR/LB/2023-767 இலக்க மற்றும் 2023.02.06ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதினை தவிர்ந்து கொள்வதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...