உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறவுள்ளதனால் அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களில் நடைபெறவுள்ள புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய இந்த பொதுக்கூட்டங்களை (சாதாரண தெரிவு/ இரகசிய வாக்கெடுப்பு) உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் EDR/LB/2023-767 இலக்க மற்றும் 2023.02.06ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதினை தவிர்ந்து கொள்வதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.