மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Date:

நாட்டின் போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்குமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேகா இனோவேட்டிவ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துக்கு கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

UNDP உதவியின் கீழ் இலங்கையில் 300 முச்சக்கர வண்டிகளை மின்சார வாகனமாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு புதிய உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்கு அவர்களின் வடிவமைப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது, எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் மட்டுமின்றி, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், படகுகள் உள்ளிட்ட பல வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிக தேவையுடைய ஒரு தொழிலாக வளர்ந்து வரும் இலங்கை ரயில்வேயின் பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் சொத்துக்களை வழங்கவும் தேவையான வசதிகளை வழங்கவும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...