மின் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை முறிந்தது

Date:

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார கட்டணம் தொடர்பில் கலந்துரையாடி தெளிவான தீர்மானத்திற்கு வருமாறு தேசிய சபை நேற்று (13) மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தது.

இதன் பிரகாரம் இரு தரப்பினருக்கும் இடையில் இன்று  மின்சார கட்டணம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை மின்சார கட்டணம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் நாளை (15) வழங்கப்படும் என நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, திரன் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சாகர காரியவசம், பணிமனை பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...