மீடியா போரத்தின் 73ஆவது ஊடக கருத்தரங்கு ஹெம்மாதகம அல்-அஸ்ஹரில்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலையில்) நடைபெறவுள்ளது.

ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் இக்கருத்தரங்கு இரு அம்சங்களாக இடம்பெறவுள்ளது.

பாடசாலைகளின் ஊடகக்கழக அங்கத்தவர்கள் , பொறுப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கும் அல் அஸ்ஹர் உட்பட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கொன்றும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி திருமதி புர்கான் பீ இப்திகார் மற்றும் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.நவாஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெறும்.

இக்கருத்தரங்கில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும் நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன், மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும் ஊடாக பயிற்றுவிப்பாளருமான சிஹார் அனீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான தாஹா முஸம்மில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம் . பி. எம் பைரூஸ், போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினரான ஊடகவியலாளர் சாமிலா ஷரீப், உப தலைவர் எம். ஏ. எம். நிலாம், உதவி பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினரான அஷ்ரப் ஏ ஸமத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கருத்தரங்கின் இறுதியில் மாலை இடம்பெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார் என கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஆதில் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் கேகாலை மாவட்ட மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கலந்துரையாடலும் இந்த நிகழ்வின்போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...