588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் சிறைச்சாலைகளின் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இன்று தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றங்களால் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறைச்சாலைகளில் சிறந்த நடத்தைகளால் நிரூபிக்கப்பட்ட 31 கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று பேச்சாளர் கூறினார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...