இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

Date:

  இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமில இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
முதல் தொகுதியாக இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்கள் அரசின் கால்நடைத் துறையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை  பேக்கரி தொழிலுக்கு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  முட்டை ஒன்றின் விலை 48 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

இந்த தட்டுப்பாடு காரணமாகவே அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டை தேவைப்படுகின்ற போதிலும் 50 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

ஆனால்இ வாரந்தோறும் முட்டை உற்பத்தி அதிகரித்து வருவதாகவும்இ கோழிப்பண்ணைகளில் இருந்து ஒரு முட்டை 42 அல்லது 43 ரூபாய்க்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்இ 60 கிராமுக்கு மேல் முட்டை இருந்தால் விலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...