இலங்கை சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் இத்தாலி!

Date:

இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளைப் இத்தாலி  அரசாங்கம் பாராட்டியுள்ளது.

அதேநேரம் இலங்கைக்கு வருகை தரும் அதிகமான இத்தாலி  சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இத்தாலிய  பிரதி வெளிவிவகார அமைச்சர் எட்மண்டோ சிரியெல்லி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறவும் வலுப்படுத்தவும் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை இத்தாலி பாராட்டுவதாக எட்மண்டோ சிரியெல்லி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் “புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை துரிதப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சுற்றுலாத்துறை முதன்மையாக பங்களிப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இலங்கைக்கு அதிகளவான இத்தாலி  சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு ஆதரவை வழங்குமாறு இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...