இலங்கைக்கு 400 மில்.அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியது IFC!

Date:

உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று (27) IFC வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக, மருந்து, உணவு மற்றும் உரம் உட்பட 30% இறக்குமதிக்கு நிதியளிக்கும் வசதியை மூன்று தனியார் வங்கிகள் பெறும் என்று சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவி, முதலீட்டாளர் சமூகத்தில் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக புதிய மூலதன வரவுகளை ஈர்க்கும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக தெற்காசியாவுக்கான நிதியியல் நிறுவகங்கள் குழுமத்தின், சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபன முகாமையாளர் ஜூன் பார்க் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...