சஜித்- அனுரவின் கட்சிகள் இணைந்து ஒரே மேடையில் போராட்டம்?

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு மேடையில் போராட்டம் நடத்தவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவ்வாறான செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு இரு கட்சிகளும் பொதுவான மேடையில் இறங்க முடிவு செய்துள்ளதாக சில செய்தி இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

‘மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் மத்தும பண்டார தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பொது பேரணியை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் ஒருபோதும் உரையாடவில்லை, நாங்கள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று மத்தும பண்டார ஆங்கில செய்தி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...