தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வு!

Date:

தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான 4 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளன.

மேற்படி நிகழ்வில் பள்ளிவாயல் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் இடம் பெறும்.

சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர் அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் அதன் நிறைவேற்று குழு, செயலகக் குழு, பொதுச்சபை உறுப்பினர்கள், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சி நிலையில் இருப்பதினால் மேற்படி நிகழ்வு “நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற மகுடத்தில் இடம்பெறவுள்ளது. நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் நாட்டை கட்டி எழுப்புவதன் அவசியம் தொடர்பான தத்துமது மதங்களது கருத்துக்களை உள்ளடக்கி உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

சிங்கள மொழியின் இஸ்லாமிய தஃவா பணியாளர் மௌலவி அம்ஹர் ஹகம்தீன், சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி ஆகியோருடன் பெளத்த, கிறிஸ்தவ மத குருக்களும் உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும் என சூரா சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...