நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவிகளை வழங்க இலங்கை தயாராகவுள்ளது

Date:

துருக்கி அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உதவிகளை வழங்கவுள்ளது.

அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துருக்கியில் உள்ள 13 இலங்கையர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 14 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்புடைய ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை 4000 மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 6,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கம், எல்லையின் இருபுறமும் அழிவையும் குப்பைகளையும் விட்டுச்சென்றதையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தப்பியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். .

Popular

More like this
Related

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை...

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...