பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும், ஓரினச்சேர்க்கையை குற்றமாக்க கருதுவதை நீக்க வேண்டும் எனவும் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற 42 ஆவது அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.