‘முஸ்லிம்களை வாழ விடு’:காத்தான்குடியில் பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி சாத்வீகப்போராட்டம்!

Date:

பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாசல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிவாசலை  மீளப்பெற்றுத்தரக் கோரியும்  இந்த போராட்டம் இடம்பெற்றது.

காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் இருக்கும் தாருல் அதர் பள்ளிவாசல் நீண்ட காலமாக மூடி தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த இறை இல்லத்தை இலங்கை பொலிஸ் தினைக்களம் அத்துமீறி பொலிஸாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய காரியாலயமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதன்போது காத்தான்குடி முழுவதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் என்பவற்றை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:எம்.பஹ்த் ஜுனைட்

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...