மைத்திரி – தயாசிறிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜா-எல பிரதேச சபையின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், சமாலி பெரேராவுக்குப் பதிலாக, வேறொருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதை தடுத்தமை தொடர்பில்,  நீதிமன்றம்  இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையுமின்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு முரணாக, தம்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அதற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க தயாராகுவதாக தெரிவித்து, மனுதாரர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை, அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை, அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...