இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு வாய்ப்பு!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் புர்கி அவர்கள் கொழும்பு கங்காராமய விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள பௌத்த பாரம்பரியம் மற்றும் அப்பகுதிகளுக்கு புனித யாத்திரை செல்வதை ஊக்குவிக்கும் வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக, உயர்ஸ்தானிகர் தலைமையில் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உலர் உணவுப் பொதிகள் விநியோகத்தின் மூலம் எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை வணக்கத்திற்குரிய தேரர் பாராட்டினார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...