சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி பாராளுமன்றத்தில் தோற்கடிப்பு

Date:

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முன்வைக்கப்படாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்ததையடுத்து சபையில் காரசாரமான சூழ்நிலை ஏற்பட்டது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கான பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து இன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் தீர்மானத்திற்கு எதிராக 113 வாக்குகளைப் பெற்று வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக சந்திம வீரக்கொடி எம்.பி மாத்திரம் வாக்களித்த நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்தார்.

அதன்படி சட்டக் கல்வி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...