துருக்கியின் அணுமின் நிலைய திறப்பு விழாவில் புட்டின் கலந்து கொள்ளும் சாத்தியம்!

Date:

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான மெர்சினில் அமைந்துள்ள முதல் அணுமின் நிலைய திறப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் 27 அன்று துருக்கிக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புடின் மெர்சினுக்கு நேரில் செல்லலாம் அல்லது தொலைதொடர்பு மூலம் விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான மெர்சினில் அமைந்துள்ள இந்த திட்டம் துருக்கியின் முதல் அணுமின் நிலையமாகும்.

இது ஆண்டுதோறும் 35 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மற்றும் உள்நாட்டு மின்சாரத் தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உலகின் முதல் அணுமின் நிலையத் திட்டமானது, சொந்தமாக இயக்கும் மாதிரி மூலம் செயல்படுத்தப்பட்டது.

ஒரு ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவின் Rosatom  நிறுவனம் மின் உற்பத்தி நிலையத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதேநேரம் ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இணைந்து கட்டப்பட்ட நாட்டின் முதல் அணுமின் திட்டமாகும்.

இதேவேளை இந்த அணுமின் நிலையம் துருக்கியின் ‘இன்றியமையாத முதலீடுகளில்’ ஒன்று எனவும் இந்த வசதி நாட்டிற்கு ‘தீவிரமாக ஆற்றலைச் சேமிக்க’ உதவும் எனவும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

4,800 மெகாவாட் மற்றும் நான்கு அணுஉலைகள் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த ஆலை இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...