தேயிலை விலையில் வீழ்ச்சி!

Date:

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலை தூளின் பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்தால் தேயிலையின் விலை மேலும் வீழ்ச்சியடையும் எனவும், இதனால் தேயிலை கைத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ மலையக தேயிலை 1,250 ரூபாவிற்கு கிடைத்ததாகவும், தற்போது 1,050 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு அதிக செலவை சுமக்க வேண்டியுள்ள நிலையில், ஒரு கிலோ தேயிலைக்கு பெறப்படும் தொகை குறைவடைந்துள்ளமையினால் தேயிலை கைத்தொழில் கடும் ஆபத்தில் உள்ளதாக தோட்ட அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...