நாட்டின் இயல்பு நிலை பாதிப்பு: ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அரச நிறுவனங்களில் ஊழியர்களின் வருகை குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக தொடருந்துகள்  இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோரப் பாதையில் நான்கு தொடருந்துகளும்  புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு தொடருந்துகளும்  கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இயங்கிய சில தொடருந்துகளுக்கு  இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக  குறிப்பிடப்படுகின்றது.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்து விநியோகம் உட்பட மருத்துவ மற்றும் ஆய்வக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...