பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!

Date:

2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல், நவம்பர் 12 ஆம் திகதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலை மூன்றாம் தவணை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
க.பொ.த சாதாரண தரத்திற்கு மே 13 மற்றும் 24 ஆம் திகதிக்கு இடையில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றுமொரு பாடசாலை விடுமுறை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிரிவேனா அதிபர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...