புனித மாதமான ரமழானில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய சடங்குகள்!

Date:

(Photos: Ali Jadallah/AA)

புனித ரமழான் மாதத்தில், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பாரம்பரிய சடங்குகள் உள்ளன.

அந்தவகையில், முஸ்லிம்கள் தங்கள் தினசரி நோன்பை ஆரம்பிப்பதற்கு விடியற்காலை நெருங்கும் போது, முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் ஒரு பழக்கமான கோஷம் எழுப்புவது காஸாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

காசாவில் ரமழான் டிரம்மர்களின் பாரம்பரியத்தைத் தொடரும் மூன்று பேர் கொண்ட குழு, ரமழானுக்கான தினசரி நோன்பு தொடங்குவதற்கு முன்பு அதிகாலையில் உண்ணப்படும் சஹருக்கு மக்களை எழுப்ப தெருக்களில் சுற்றித் திரிகிறது.

முசாஹரதி என்றும் அழைக்கப்படும், டிரம்மர்கள் பாரம்பரியமாக முகக்கவசங்களை அணிந்துகொண்டு, டிரம்ஸ் அடித்து, ரமழான் பாடல்களைப் பாடுகிறார்கள்.

பலஸ்தீனிய நகரங்களில் அலாரம் கடிகாரங்கள் இருந்தபோதிலும் இந்த பழமையான பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது.

இதேவேளை டிரம்மர்களின் மெல்லிசை முழக்கங்கள் மற்றும் டிரம் ஓசைகள் ரமழானின் ஆன்மீக சூழலை சேர்ப்பதுடன் மேலும் நோன்பு அனுபவத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...