மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

Date:

டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் பிரகாரம் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

டெங்கு என்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டெங்கு நுண்ணுயிர்  பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரூ.3,000 வரை கட்டணம் வசூலித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முழுமையான இரத்த எண்ணிக்கைப் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா வரை அறவிடப்படும் அதேவேளை அதிகபட்ச விலை 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்த 10 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...