ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட வேலைத்திட்டம்!

Date:

ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச அதிகாரிகள், தொழுகை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

இது தொடர்பான அரச நிர்வாகச் சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டச் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

ரமழான்  மாதம் 23ஆம்  திகதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் திகதி முடிவடையும் என்றும், அந்த காலகட்டத்தில் அனைத்து முஸ்லிம் அரசு அதிகாரிகளின் பணி நேரத்தையும் அவர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில்  சிறப்பு விடுப்பு மட்டும் அளிக்கப்படும்.

ரமழான்  முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், பொது சேவை, பொது நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளில் தகுதியான முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை முன்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...