ரமழான் மாதம் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையட்டும்: சவூதித் தூதுவர்

Date:

ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

ரமழான் மாதத்தை முன்னிட்டு  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகர நிகழ்வை நினைவுபடுத்தும் அருள் மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அப்புனிதமிகு மாதத்தை அடைந்துகொள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இலங்கையில் அடைந்துகொண்ட முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.
ஆகவே அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமையப் பெற பிரார்த்திக்கின்றேன்.

இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில் ஈடுபடும் பாக்கியத்தை அடையவும், அனைவரது நற் செயல்களையும் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...