ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது: அனுர

Date:

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு ஒட்டுமொத்த மாற்றம் அவசியம், டொலருக்கான தேவை குறைவு, பொருளாதாரச் சரிவு, இறக்குமதித் தடை, டொலரின் நிரம்பல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என்றார்.

விரும்பிய இலக்குகளை அடையத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க புதிய சந்தைகளைக் கண்டறிந்து பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...