இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பரிசோதிக்க நடவடிக்கை

Date:

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்க அனுப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறிவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக பணிப்பாளரும் வைத்தியருமான ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நான்கு நாட்களுக்குள் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாவிட்டால், கையிருப்பு முட்டைகளை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் முட்டை விலைக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...