ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: புலஸ்தினி மகேந்திரன் உயிரிழப்பு

Date:

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீடொன்றிற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மத்தியில், சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குகின்றமை டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் புலஸ்தினி மகேந்திரனும் உயிரிழந்துள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ மாதிரிகளின் ஊடாக, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...