எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேற்று உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு….!

Date:

இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எகிப்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 36,000 மெட்ரிக் தொன் உரம் நேற்று (19) விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதன்படி, மூன்று பருவங்களுக்குப் பிறகு, முதல் இருப்பு சேற்று உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல் தொகுதியாக 11,537 மெற்றிக் தொன் உரம் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.

மன்னாருக்கு 1244, வவுனியாவுக்கு 821, கிளிநொச்சிக்கு 820, முல்லைத்தீவுக்கு 694, யாழ்ப்பாணத்துக்கு 297, மட்டக்களப்புக்கு 1824, அம்பாறைக்கு 4066 , திருகோணமலைக்கு 1746 மெட்ரிக் தொன் என விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...