சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் மீடியா போரத்தினால் விசேட கருத்தரங்கு ஞாயிறன்று!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு, மற்றும்  மேற்குப் மாகாண  பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கொன்று எதிர்வரும் 12 அன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு 24 ஹோர்டன் பிளேஸில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் லைட்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்  ஃபரீனா ருஸைக், சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெஹ்ரான், ஈரான் பெண்கள் மற்றும் குடும்ப ஆய்வுகளில் கலாநிதி பட்டம் பெற்ற Zahirah mirjafari, கலாநிதி மரீனா தாஹா ரெஃபை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், saturday express  தலைமை ஆசிரியர், ஹனா இப்ராஹிம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீன், 077 261 2288, அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...