உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இவ் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.