பல்கலைக்கழகத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டமைக்காக பொலிஸார் மன்னிப்பு கோரினர்!

Date:

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம்  நேற்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதுடன், கொழும்பில் பல வீதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒன்று கூடியிருந்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இந் நிலையில் சிலர் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்ததையடுத்து பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...