பல்கலைக்கழகத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டமைக்காக பொலிஸார் மன்னிப்பு கோரினர்!

Date:

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம்  நேற்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதுடன், கொழும்பில் பல வீதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒன்று கூடியிருந்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இந் நிலையில் சிலர் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்ததையடுத்து பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...