‘பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு தொடர்பில் ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்’

Date:

 பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு மற்றும் சேவைக் கட்டணங்களை ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர்  பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

அதேநேரம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் (NTC) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் எனவும், பிரச்சினைகளை கவனிக்க வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தத்திற்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருளின் விலையில் பெரும் வீழ்ச்சியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பரிசீலித்து வருவதாகவும், இந்த கோரிக்கை குறித்து மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை குறைப்பதன் மூலம் அந்த நன்மையை மக்களுக்கும் வழங்க முடியும்.

அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவது, உதிரி பாகங்களின் விலையை நேரடியாக பாதிக்கும். ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைபெறும்.

ஆனால் ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் மக்களுக்கான பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...