பஸ் கட்டணங்கள் எதிர்காலத்தில் குறையலாம்: போக்குவரத்து அமைச்சர்

Date:

எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும், இப்போது போக்குவரத்து கட்டணத்தை குறைக்கலாம். ஏனெனில் மாற்று விகிதம் நிலையாக இருந்தால், டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் அளவு குறைந்தால், நமது எரிபொருள் செலவு குறையும்.

இதேவேளை பிற உதிரி பாகங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு குறைந்த செலவின் பலனை மக்களுக்கு வழங்க முடியும்.

இதேவேளை, விலை சூத்திரத்திற்கு ஏற்ப பஸ் கட்டணம் குறைக்கப்படும். விலை சூத்திரத்துக்கு அமைய, விலை குறையும் போது, ​​வாடிக்கையாளர் குறைவின் பலனைப் பெறுவார்.மேலும், உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது, ​​கட்டணம் அதிகரிக்கப்படும்” என்றார்.

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதிகளின் ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...