பாகிஸ்தானின் IMF கடன் வசதி மேலும் தாமதமானது: கலக்கம் அடைந்துள்ள அரசு

Date:

பாகிஸ்தான் எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மேலும் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தொழில்நுட்ப காரணங்களால் பாகிஸ்தான் கோரிய கடன் வசதி தாமதமாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் தற்போதுள்ள சிக்கல்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஒப்புதலையும் பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலைகளில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரைவான கடன் தவணையாக பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

கடந்த நவம்பரில் பெறப்பட இருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அது தடைப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கோரும் மொத்த கடன் நிவாரணம் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...