புனித மாதமான ரமழானில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய சடங்குகள்!

Date:

(Photos: Ali Jadallah/AA)

புனித ரமழான் மாதத்தில், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பாரம்பரிய சடங்குகள் உள்ளன.

அந்தவகையில், முஸ்லிம்கள் தங்கள் தினசரி நோன்பை ஆரம்பிப்பதற்கு விடியற்காலை நெருங்கும் போது, முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் ஒரு பழக்கமான கோஷம் எழுப்புவது காஸாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

காசாவில் ரமழான் டிரம்மர்களின் பாரம்பரியத்தைத் தொடரும் மூன்று பேர் கொண்ட குழு, ரமழானுக்கான தினசரி நோன்பு தொடங்குவதற்கு முன்பு அதிகாலையில் உண்ணப்படும் சஹருக்கு மக்களை எழுப்ப தெருக்களில் சுற்றித் திரிகிறது.

முசாஹரதி என்றும் அழைக்கப்படும், டிரம்மர்கள் பாரம்பரியமாக முகக்கவசங்களை அணிந்துகொண்டு, டிரம்ஸ் அடித்து, ரமழான் பாடல்களைப் பாடுகிறார்கள்.

பலஸ்தீனிய நகரங்களில் அலாரம் கடிகாரங்கள் இருந்தபோதிலும் இந்த பழமையான பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது.

இதேவேளை டிரம்மர்களின் மெல்லிசை முழக்கங்கள் மற்றும் டிரம் ஓசைகள் ரமழானின் ஆன்மீக சூழலை சேர்ப்பதுடன் மேலும் நோன்பு அனுபவத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது.

Popular

More like this
Related

கைரியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காலணி உதவி: பிரதி அமைச்சர் முனீர் முலாஃபரினால் வழங்கி வைப்பு.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, தெமட்டகொட கைரியா மகளிர்...

மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது: நிவாரண திட்டங்களை பிரதிபலிக்கும் புத்தளம் கவிஞர் மரிக்காரின் கவிதை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட...

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...