இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேராவின் பூதவுடல் நாளை (30) காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள விசேட சம்பிரதாய மண்டபத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை பாராளுமன்றத்தின் 17வது சபாநாயகராவார். 2001 முதல் 2004 வரை சபாநாயகராக பணியாற்றினார்.
பல அரசாங்கங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் தொழிலாளர் உட்பட அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.