ரமழானில் உம்ரா சென்றவர்களின் பஸ், விபத்து: 20 பேர் மரணம்

Date:

உம்ரா யாத்திரிகர்களைச் சுமந்து சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் சவூதி அரேபியா அசீர் நகருக்கு வடக்கே ஷார் பாஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததுள்ளது.

உம்ரா செய்வதற்காக காமிஸ் முஷைத்தில் இருந்து மக்கா நோக்கி யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மஹயில் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேரூந்து கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. வாகனத்தில் பிரேக் ஒழுங்காகச் செயற்படாமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 20 பேர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் இந்தியர்கள் 16 பேர் அடங்குகின்றனர். பேருந்தில் இந்தியர்கள் தவிர வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

காயமடைந்த 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காயமடைந்தவர்கள் அபாஹா ஆசிர் மருத்துவமனை மற்றும் ஜெர்மன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு...

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...

பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி: பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன்...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...