ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது: அனுர

Date:

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு ஒட்டுமொத்த மாற்றம் அவசியம், டொலருக்கான தேவை குறைவு, பொருளாதாரச் சரிவு, இறக்குமதித் தடை, டொலரின் நிரம்பல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என்றார்.

விரும்பிய இலக்குகளை அடையத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க புதிய சந்தைகளைக் கண்டறிந்து பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...