ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது: அனுர

Date:

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு ஒட்டுமொத்த மாற்றம் அவசியம், டொலருக்கான தேவை குறைவு, பொருளாதாரச் சரிவு, இறக்குமதித் தடை, டொலரின் நிரம்பல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என்றார்.

விரும்பிய இலக்குகளை அடையத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க புதிய சந்தைகளைக் கண்டறிந்து பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...