வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Date:

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அனைத்து பிராந்திய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஈடுபடவுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...