வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்கான கொடுப்பனவு ரூ.4 கோடி நிலுவையில்

Date:

 தேர்தலுக்கான  வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்ட அரச அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுக்கான நான்கு கோடி ரூபாவை திறைசேரி இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே திறைசேரியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களுக்காக அரசாங்க அச்சகம் இதுவரை 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவிட்டுள்ளது.

இதேவேளை, நிதிப் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகம் முற்றாக நிறுத்தியுள்ளது.

தற்போது வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணத்தை வழங்க முடியாது என திறைசேரி அண்மையில் அரசாங்க அச்சகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...