நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கும் வகையில், சமத்துவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு தேவையான திறன்களுடன் வலுவூட்டும் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார்.
நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், பெண்களின் பெருமை, கெளரவம் மற்றும் வலிமையை பிரதிபலிக்கும் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், அதேபோல உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பவர்களாக இருப்பதும் பெண்களே.
இன்று தனித்துவமாக, கல்வியறிவு பெற்ற இலங்கைப் பெண்கள், தொழில்ரீதியாக நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குகிறார்கள்.
இந்த நாட்டின் பெண்களின் பல பண்புகளைப் பயன்படுத்தி, ஒரு நெகிழ்ச்சியான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் இருக்கின்றார்கள்.
நிர்வாகம் மற்றும் அரசியல் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசாங்கம் மேலும் அர்ப்பணிப்புடன் உள்ளது, எனவே பாராளுமன்றத்தில் மட்டுமின்றி பொது மற்றும் தனியார் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
மேலும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான சட்டம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய மகளிர் ஆணையம் ஒரு சுதந்திர அமைப்பாக நிறுவப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தோட்டங்கள் மற்றும் ஆடைத் துறைகளில் இயக்குனரக சபைகளுக்கு ஒம்புட்ஸ்வுமன் மற்றும் பெண்களை நியமிக்க வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சமகால உலகில் அவர்களின் பங்கைப் புரிந்துகொள்ளும் தைரியமான பெண்களின் தலைமுறையை உருவாக்கும் குறிக்கோளுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்த அளவில் பங்களிக்கும் வகையில், சமத்துவத்தின் அடிப்படையில் தேவையான திறன்களைக் கொண்ட பெண்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.
நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், 2048 இல் வெற்றிகரமான “வளர்ந்த தேசத்தை உருவாக்குவதற்கும் இந்த நாட்டின் பெண் தலைமுறையினரின் ஆதரவை முழுவதுமாக நம்பி இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.