IMF ஆலோசனைக்கமையவே எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது: எரிசக்தி அமைச்சர்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமையவும் அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக   எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) பெற்ற இலாபம் அல்லது நட்டத்துடன், எரிபொருளின் மீது விதிக்கப்படும் உண்மையான வரித் தொகை மற்றும் விலையை அதிகரிப்பது அல்லது குறைப்பது ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான ஒரு முறையாக புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் கடந்த ஆட்சியில் அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் வழிகாட்டலின் கீழ் எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சூத்திரம் இதுவாகும்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...