இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பரிசோதிக்க நடவடிக்கை

Date:

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்க அனுப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறிவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக பணிப்பாளரும் வைத்தியருமான ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நான்கு நாட்களுக்குள் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாவிட்டால், கையிருப்பு முட்டைகளை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் முட்டை விலைக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...