இன்று கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு!

Date:

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக அம்பத்தலே நீர் விநியோக நிலையத்திற்கான மின் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...