இலங்கைக்கு உதவும் வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன:சர்வதேச மன்னிப்பு சபை

Date:

கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே   மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில் இக்கடன் நெருக்கடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜி-20 நாடுகள் அமைப்பு செயற்திறன்மிக்க வகையில் ஒருங்கிணைந்தால் இலங்கைக்கு அவசியமான கடனையும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...