உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புனித ரமழான் நோன்பு ஆரம்பம்!

Date:

உலகெங்குமுள்ள பெரும்பாலான நாடுகளில் இன்று வியாழக்கிழமை ரமழான் நோன்பு ஆரம்பமானது.

அந்தவகையில், சவூதி அரேபியாவில் ரமழான் தலைப்பிறை தென்பட்டதை தொடர்ந்து ரமழான் மாத ஆரம்பம் அறிவிக்கப்பட்டது.

அநேகமான அரபு நாடுகளும், சவூதியின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்களும், உலகெங்கும் சர்வதேச பிறையை அடிப்படையாகக் கொண்டு நோன்பு நோற்கின்றனர்.

அதற்கமைய சவூதி, பலஸ்தீன் அல்அக்ஸா, பாகிஸ்தான், இந்தியா டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் புதன்கிழமை சூரிய அஸ்தமனத்தில் தொடங்கியது.

ஒவ்வொரு நாடும் பிறை பார்க்கும் குழுவைக் கொண்டிருந்தாலும், இஸ்லாமிய உலகம் பொதுவாக ரமழான் மற்றும் பிற மத விடுமுறைகளைத் தீர்மானிக்க சவூதி அரேபியாவையே நாடுகின்றன.

மேலும், குவைத், எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், எகிப்து, லெபனான், பலஸ்தீனம் மற்றும் துனிசியா உள்ளிட்ட பிற நாடுகள், வியாழக்கிழமையை புனித மாதத்தின் முதல் நாளாக நோன்பை ஆரம்பித்தார்கள்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...