எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேற்று உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு….!

Date:

இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எகிப்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 36,000 மெட்ரிக் தொன் உரம் நேற்று (19) விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதன்படி, மூன்று பருவங்களுக்குப் பிறகு, முதல் இருப்பு சேற்று உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல் தொகுதியாக 11,537 மெற்றிக் தொன் உரம் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.

மன்னாருக்கு 1244, வவுனியாவுக்கு 821, கிளிநொச்சிக்கு 820, முல்லைத்தீவுக்கு 694, யாழ்ப்பாணத்துக்கு 297, மட்டக்களப்புக்கு 1824, அம்பாறைக்கு 4066 , திருகோணமலைக்கு 1746 மெட்ரிக் தொன் என விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...