துருக்கியின் அணுமின் நிலைய திறப்பு விழாவில் புட்டின் கலந்து கொள்ளும் சாத்தியம்!

Date:

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான மெர்சினில் அமைந்துள்ள முதல் அணுமின் நிலைய திறப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் 27 அன்று துருக்கிக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புடின் மெர்சினுக்கு நேரில் செல்லலாம் அல்லது தொலைதொடர்பு மூலம் விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான மெர்சினில் அமைந்துள்ள இந்த திட்டம் துருக்கியின் முதல் அணுமின் நிலையமாகும்.

இது ஆண்டுதோறும் 35 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மற்றும் உள்நாட்டு மின்சாரத் தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உலகின் முதல் அணுமின் நிலையத் திட்டமானது, சொந்தமாக இயக்கும் மாதிரி மூலம் செயல்படுத்தப்பட்டது.

ஒரு ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவின் Rosatom  நிறுவனம் மின் உற்பத்தி நிலையத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதேநேரம் ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இணைந்து கட்டப்பட்ட நாட்டின் முதல் அணுமின் திட்டமாகும்.

இதேவேளை இந்த அணுமின் நிலையம் துருக்கியின் ‘இன்றியமையாத முதலீடுகளில்’ ஒன்று எனவும் இந்த வசதி நாட்டிற்கு ‘தீவிரமாக ஆற்றலைச் சேமிக்க’ உதவும் எனவும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

4,800 மெகாவாட் மற்றும் நான்கு அணுஉலைகள் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த ஆலை இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...