நுவரெலியாவில் லொறி விபத்து: 14 பேர் காயம்; 5 பேர் கவலைக்கிடம்

Date:

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு செல்வதற்காக சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியா லபுகெல தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று (5) காலை 9.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா, லபுகெல பிரதேசத்தில் உள்ள மரக்கறிப் பண்ணையில் இருந்து நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை எடுத்துச் சென்ற தொழிலாளர்கள் விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சாரதி லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரேக் போட்டபோது, ​​சாரதியின் கட்டுப்பாட்டை மீறி சென்று பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் லபுகெல பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...